இலங்கை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கவுள்ள சீன கப்பல்!
சீன அரசாங்கத்தின் மிசன் ஹார்மோனி (Mission Harmony-2024) திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்கு சொந்தமான பீஸ் ஆர்க் (“Peace Ark”) என்ற மருத்துவமனை கப்பலை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பார்வையிட்டார்.
“Peace Ark” என்ற இந்த கப்பல் டிசம்பர் 21ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், 2024 டிசம்பர் 22 முதல் டிசம்பர் 27 வரை இலங்கை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகளை வழங்கும்.
இந்த சமாதானக் கப்பல் திட்டத்தின் மனிதாபிமான முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இலங்கை மக்களுக்கு இந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதற்காக சீன அரசாங்கத்திற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்