இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் மரணம்

காலி – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தியகம கல்பாத்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொழும்பில் இருந்து காலி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் அதே பகுதி நோக்கி சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் பெந்தர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.