ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் நல்லூருக்கு விஜயம்

-யாழ் நிருபர்-

 

இந்திய நாட்டின் ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் இன்று திங்கட்கிழமை 9 மணியளவில் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு வருகை தந்தனர்.

இதனை தொடர்ந்து நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாட்டிலும் கலந்து கொண்டதுடன் அவர்கள் ஆலய முற்புறத்திலும் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்

இந்திய ஆந்திராமாநில ஸ்ரீராம ஜெயபக்த சபையின் தலைவர் சிறி இராம ஜெயகீர்த்தி நாராயண சுவாமி தலைமையிலான 40க்கு மேற்பட்ட குழுவினர்கள் இவ் வழிபாட்டில் கலந்துகொண்டனர்.

இவர்கள் யாழ்ப்பாணம் வரலாற்றுச் சின்ன இடங்கள், ஆலயங்கள் என்பன பார்வையிடயுள்ளனர்.

ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் நல்லூருக்கு விஜயம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்