
வைத்தியசாலையில் பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி
திஹாரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை பிரதேசத்தை சேர்ந்த திருமணமாகாத 59 வயதுடைய வைத்திய நிலையத்தின் உரிமையாளரின் உறவினரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.
கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அங்கிருந்த பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
