வீதியை கடக்க முற்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

காலி – கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொட மாதம்பகம வேனமுல்ல பகுதியில் கார் மோதியதில் பெண் ஒருவர் இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

வேனமுல்ல பிரதேசத்தில் தேங்காய் எண்ணெய் ஆலை ஒன்றை நடத்தி வந்த ஐம்பது வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வீதியை கடக்கும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் பெண்ணின் சடலம் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .

மேலும் காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த விபத்தினால் காரும் பலத்த சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172