வீட்டுப் பாடம் செய்யவில்லை: தென்னம் கம்பினால் 7 வயது மாணவனை தாக்கிய ஆசிரியை
கொஸ்வத்தை நாத்தாண்டிய பகுதியில் இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பில் கொடுக்கப்பட்ட வீட்டு வேலையை செய்யாத காரணத்தினால் ஆசிரியையினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதுடன் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கொஸ்வத்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், மாணவனிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த ஆசிரியையை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தென்னம் கம்பினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தாக்கப்பட்ட மாணவனின் முதுகில் பல காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்