விசேட நிவாரணம் பெறுவோரின் விபரம் விரைவில்

வயதானோர், விசேட தேவையுடையோர் மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட பிரிவினர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் நிவாரண பட்டியல், எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படுமென சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் அறிவித்துள்ளார்.

நிவாரணம் பெருவோரின் பெயர் பட்டியல் தொடர்பில் இதுவரையில் முறைப்பாடுகள் அல்லது மேன்முறையீடு செய்யப்படவில்லை என்றால், எதி்ர்வரும் காலங்களில் இதனை பதிவு செய்ய முடியுமெனவும் மேன்முறையீட்டு செயற்பாடுகளினூடாக திருப்தி கிடைக்கவில்லை என்று கருதும் பட்சத்தில், மேன்முறையீட்டு பத்திரத்தின் பிரதியொன்றை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி செயலக தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளாா்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்