வாகன விபத்தில் ஒருவர் பலி!
மஹியங்கனை கிராந்துருகோட்டை செல்லும் வீதியில் 3 ம் கட்டைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் மஹியங்கனையில் இருந்து கிராந்துருகோட்டைக்கு செல்லும் மோட்டார்சைக்கிள் லொறி ஒன்றில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலத்த காயமடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
மஹியங்கனை காணியகொட சொரபொர பகுதியை சேர்ந்த திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறையில் இருந்த 26 வயதுடையவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதியான சொரபொர பகுதியை சேர்ந்த பாடசாலையில் ஆசிரியராகப் கடமையாற்றும் 46 வயதுடைய நபர் மஹியங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்