வடக்கு கிழக்கு சிவில் சமூக அங்கத்தவர்களுக்கான ஒன்று கூடல்
வடமாகாண சிவில் சமூக அங்கத்தவர்களுக்கான ஒன்று கூடல் நேற்று சனிக்கிழமை கிளிநொச்சியிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண சிவில் சமூக அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடல் மட்டக்களப்பிலும் மக்கள் சிந்தனை மையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
குறித்த ஒன்று கூடலின் போது வரைபு ஒன்று பேராசிரியர்களாலும் கல்விமான்களாலும் முன்வைக்கப்பட்டு அது தொடர்பிலான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இதில் வடக்கு கிழக்கு மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு உருவாக்கப்பட்டிருந்ததுடன் மேலதிகமாக கருத்துக்களை இந்த கலந்துரையாடல் மூலம் உள்வாங்கி கொள்வதற்கான சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டது.
அத்துடன் பட்டதாரிகள் மாத்திரம் இன்றி சாதாரண பொது மக்ககள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்ளும் கூட தங்களது கருத்துக்களை முன் வைப்பதற்கான தளம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படிஇ 692, பருத்தி துறைவீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை அல்லது +94777614121 அல்லது peoplethinktank@gmail.com என்ற இணையதளத்தினூடாக தங்கள் கருத்துக்களை முன் வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
Beta feature
Beta feature
Beta feature
Beta feature
Beta feature
Beta feature
Beta feature
Beta feature