2022ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘காந்தாரா’.
இத்திரைப்டத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
குறைந்த பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான ‘காந்தாரா சாப்டர்1’ கடந்த 2ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியானது.
இத்திரைப்படம் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.
இந்தநிலையில், ‘காந்தாரா சாப்டர்1’ திரைப்படம் வெளியாகி 11 நாட்களில் உலக அளவில் இதுவரை ரூ.655 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘காந்தாரா சாப்டர்1’ திரைப்படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பார்க்கப்படுகின்றது.