ரீ பில்டிங் ஸ்ரீலங்கா நிதியத்திற்கு மேலும் ஐந்து மில்லியன் ரூபா நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ரீ பில்டிங் ஸ்ரீலங்கா ‘‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பாணந்துறையைச் சேர்ந்த காணி உரிமையாளரும் பெருந்தோட்ட உரிமையாளருமான எம். டபிள்யூ. பீரிஸ், தனது தனிப்பட்ட நிதியிலிருந்து ஐந்து மில்லியன் ரூபா நன்கொடை வழங்கினார்.

அதற்கான காசோலையை எம். டபிள்யூ. பீரிஸ், இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.