ரஷ்யாவின் தாக்குதல் இரக்கமற்றது – யுக்ரைன் ஜனாதிபதி

கியேவின்பிரதான அரசாங்க கட்டடத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் இரக்கமற்ற தாக்குதல் எனயுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்குப் பொருத்தமான பதிலடியை அளிக்கப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

தலைநகரில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது, ரஷ்யா நடத்திய தாக்குதல்களில், குழந்தை உட்பட 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 44 இற்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் செலென்ஸ்கி கூறியுள்ளார்.

எனினும், இந்தத் தாக்குதல்களில் இராணுவம் மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்பை மாத்திரமே தாம் குறிவைத்ததாக ரஷ்யா கூறியுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட பின்னர் , யுக்ரைனுக்கு அமைதி காக்கும் துருப்புகளை மேற்கத்தேய நாடுகள் அனுப்பும் யோசனைக்கு எதிராக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.