யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் தரம் ஆறு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம்-தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின், தரம் ஆறு (6) மாணவர்களுக்கான கால்கோள் விழா, கல்லூரி முதல்வர் தி.வரதன் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
கல்லூரியின் தரம் ஆறு மாணவர்களை, கல்லூரியின் தரம் ஏழு மாணவர்கள் மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்று, கால்கோள் விழாவானது பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.




