யாழில் நடைபெற்ற பொதுக் கட்டமைப்பின் முதலாவது சந்திப்பு

தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிகளும் 7 தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பின் முதலாவது சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

நேற்று, ஜூலை மாதம் 28ஆம் திகதி, யாழில் உள்ள தனியார் ஹோட்டலில் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை இச்சந்திப்பு இடம் பெற்றது.

இச்சந்திப்பில் பொது வேட்பாளரைத் தெரிவு செய்வது, கட்சிச் சின்னத்தைத் தெரிவு செய்வது, நிதியை முகாமை செய்வது, பரப்புரையைத் திட்டமிடுவது போன்றவற்றுக்கான உபகுழுக்கள் உருவாக்கப்பட்டன.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்