யாழில் நடை பயிற்சியில் ஈடுபடும் ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, யாழ்ப்பாணம் வீதியில் நடை பயிற்சியில் ஈடுபடுகின்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தைப்பொங்கலை முன்னிட்டு, யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, இன்று வெள்ளிக்கிழமை காலை இவ்வாறு நடை பயிற்சியில் ஈடுபட்டார்.

இதன்போது, வீதியில் பயணிக்கின்ற மக்களுக்கு அவர் சைகையில் வணக்கம் கூறியவாறு நடைபயிற்சியில் ஈடுபட்டார்.