யாழில் கசிப்புடன் சந்தேக நபர் கைது

10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வைத்து நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் (வயது 42) 10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.