
யாழில் 15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ் நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாயைச் சேர்ந்த 46 வயதுடையவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின் நீதிமன்ற நடவடிக்கைக் குட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
