
மொரட்டுவை மேயர் வீட்டின் மீது முட்டைவீச்சு
மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் வீட்டின் மீது போராட்டக்காரர்களால் கற்கள் வீசப்பட்டன எனினும், பொலிஸார் தலையிட்டு, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.சாமர சம்பத் தசநாயக்க சென்ற வாகனம் மீது முட்டைவீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட எம்.பியான இவர். வெல்லவாயவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்றபோது முட்டைவீச்சி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.