முட்டையை எடுக்கச் சென்ற முதியவர்: 40 முதலைகளுக்கு பலி
கம்போடியாவில் 40 முதலைகள் ஒன்று சேர்ந்து லுவான் நாம்( வயது – 72) என்ற முதியவரைக் கடித்துக் குதறியுள்ளது.
அவரின் சொந்த பண்ணை முதலைகளில் ஒன்று முட்டைகளை இட்டுள்ளது.அதனால், அவர் தாய் முதலையை கூண்டிலிருந்து வெளியேற்றி விட்டு, முட்டைகளைச் சேகரிக்க குச்சி ஒன்றை எடுத்து முதலையை விரட்ட முயற்சி செய்துள்ளார்.
அப்போது, குச்சியைப் பிடித்த முதலை, அவரை வேகமாக இழுத்தது. அதில் தடுமாறிய அவர் கீழே விழுந்த நிலையில் அங்கிருந்த சுமார் 40 முதலைகள் அவரைச் சுற்றி வளைத்து கடித்து குதறியுள்ளது. வலியால் அலறியவர் சில மணி நேரத்திலேயே பரிதமாபாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சியம் ரீப் பகுதியின் தலைமைக் கெபலிஸார் மேய் சேவரி, ” சியம் ரீப் பகுதியைச் சுற்றி முதலைப் பண்ணைகள் அதிகமாக இருக்கின்றன. முதலையின் முட்டை, தோல், இறைச்சிக்காக மக்கள் அதை அதிகமாக வளர்க்கின்றனர். இதுபோல 2019-ம் ஆண்டும், இரண்டு வயது சிறுமி ஒருவர் தவறுதலாக அவர்களது முதலைப் பண்ணைக்கு அருகே சென்றபோது, முதலைகளால் கடித்துக் கொல்லப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்