முச்சக்கரவண்டி விபத்து: 4 மாணவர்கள் படுகாயம்

பண்டாரவளை கொஸ்லந்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 4 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

கொஸ்லந்த பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டி 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதன்போது அதில் பயணித்த 4 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில், கொஸ்லந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்