மீண்டும் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடா?
எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெற்றோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான மீள்நிரப்பு எரிபொருள் நிலையங்கள் விலை சீர்திருத்தத்தினால் தமது எரிபொருள் தேவைக்கான முன்பதிவுகளை செய்யவில்லையென சங்கத்தின் துணை செயலாளர் கபில சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் தற்போது நாட்டில் பெற்றோல் மற்றும் டீசலுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர் சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அண்மையில் வாகனங்கள் வரிசையில் நிற்பதைக் காணமுடிவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என தெரிவித்த அவர் தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு சிலரால் உருவாக்கப்பட்டதே என்றும் கூறினார்.
அதே வேளை இன்று வியாழக்கிழமை மாலைக்குள் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் நாளை வெள்ளிக்கிழமை ஏனைய மாகாணங்களிலும் எரிபொருள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்