
மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
பலத்த மின்னல் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று வியாழக்கிழமை இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சபரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது.
மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

