மின்சாரம், சுகாதாரம், எரிபொருள் மீண்டும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்
மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளான எரிபொருளின் விநியோகம், பெற்ரோலிய பொருட்கள், மற்றும் சுகாதார சேவைகள் மீண்டும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, 2022 ஆகஸ்ட் 03, செப்டம்பர் 03, அக்டோபர் 4, 2023 ஜனவரி 3, 2023 பெப்ரவரி 17ஆகிய திகதிகளில் இந்த சேவைகள் அத்தியாவசியமானது என்று அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்