மருந்து ஒவ்வாமையால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 6ஆம் திகதி காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த  நிலையில் வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக  உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நோயாளியின் உயிரிழப்பிற்கு பின்னர் குறித்த நோய் எதிர்ப்பு மருந்தின் பயன்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய மருந்து ஒவ்வாமை சம்பவங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் முடிவுகளின்படி, இரண்டு நோயாளிகளே ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்த தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்