மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்பி கனகசபை காலமானார்
மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்ந தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை தனது 86 வது வயதில் நேற்று வெள்ளிக்கிழமை வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
1939 ஆம் ஆண்டு பிறந்த ஓய்வு நிலை அரச உத்தியோகத்தரான இவர் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்தேசியத்தின் தீவிர பற்றாளராய் இருந்து தமிழ்த் தேசியப் பரப்பில் பயணித்த அன்னாரது இழப்பு பலரையும் கவலைகொள்ளச் செய்துள்ளது.