மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு -வீடியோ இணைப்பு-
மட்டக்களப்பில் வரலாற்று சிறப்பு மிக்க புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு இன்று வெள்ளிக்கிழமை ம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் புடைசூழ நடைபெற்றது.
கடந்த 22ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிய இப்பெருவிழாவில் நேற்று வியாழக்கிழமை கன்னிக்கால் வெட்டும் சடங்கு இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் புடை சூழ மட்டக்களப்பு வாவியில் அம்பாளின் திருமஞ்சட்குளிர்த்தல் நிகழ்வு இடம்பெற்றதை தொடர்ந்து தீமிதிப்பு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.