மட்டக்களப்பு குருக்கள்மடம் கிருஷ்ணர் ஆலயத்தில் திருப்பாவை தீர்த்தோற்சவம்

 

மட்டக்களப்பு குருக்கள்மடம் கிருஷ்ணர் ஆலயத்தில் திருப்பாவை தீர்த்தோற்சவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

முக்கிய விரதங்களுள் ஒன்றாக கருதப்படுகின்ற திருப்பாவை விரதம், கடந்த டிசம்பர் மாதம் 15 ம் திகதி ஆரம்பமாகியது டன், அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை என்பன பாடப்பட்டு, அதிகாலையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெறுகின்றது.

விரதங்களில் சிறந்த விரதமாக கருதப்படும் சொர்க்கவாயில் வைகுண்ட ஏகாதசி விரதம் மிகவும் சிறப்பாக கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

30 நாட்கள் இடம்பெற்ற திருப்பாவை பெருவிழா, இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட கிரியை வழிபாடுகளை தொடர்ந்து, சமுத்ரா தீர்த்தோற்சவத்துடன், இனிதே நிறைவு பெற்றது.

பூஜை நிகழ்வுகள் யாவும் சோமேஸ்வரம் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்