மட்டக்களப்பில் இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு -வீடியோ இணைப்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் பற்றைக்குள் இருந்து இன்று வெள்ளிக்கிழமை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

களுவாஞ்சிகுடி திருமுருகன் வீதியில் உள்ள பற்றைக்காடு பகுதியில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபனின் உத்தரவுக்கமைய சடலத்தைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி திடீர்மரண விராணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு பேதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைப்புமாறு உத்தரவிட்டார்.

சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடி திருமுருகன் கோயில் வீதியைச் சேரந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை (வயது-71) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.