மடிக்கணினிகளை மடியில் வைத்து கொண்டு சென்றவர் கைது
தீர்வைக் கட்டணம் செலுத்தாமல் டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 100க்கும் மேற்பட்ட மடிக்கணினிகளை வைத்திருந்த இந்தியப் பிரஜை நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
சந்தேக நபர் இந்தியாவின் சென்னையில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் உதவியாளர் எனவும், மேற்படி கோடீஸ்வர வர்த்தகர் மடிக்கணினிகளை இலங்கைக்கு கொண்டு வந்து இந்தியாவில் உள்ள வர்த்தகர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வியாபார நிமித்தமாக நாட்டிற்கு வந்து காலை மற்று மாலை வேளைகளில் இந்தியாவுக்குத் திரும்பும் இந்திய வர்த்தகர்களின் கைகளில் மடிக்கணினிகளை கொடுத்து சந்தேகநபர் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அந்த வர்த்தகர்கள் தமது தனிப்பட்ட மடிக்கணினி என அறிமுகப்படுத்தி அவ்வப்போது இந்தியாவிற்கு எடுத்துச் செல்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.