புலமைப் பரிசில் பரீட்சையில் இரண்டாவது இடத்தை பெற்று சாதனை புரிந்த மாணவி
-யாழ் நிருபர்-
யா/புனித ஜோன்.பொஸ்கோ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தீப்தி ஜெகானந்தன் என்ற மாணவி தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 187 புள்ளிகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடத்தையும் யாழ். மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவ்வாறு சிறந்த பெறுபேற்றை பெற்று சாதனை புரிந்து பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்த மாணவியை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.