
புதையல் தோண்டிய மூன்று சந்தேக நபர்கள் கைது
மொனராகலையில் தனமல்வில – கஹகுருல்லன்பெலஸ்ஸ பகுதியில் புதையல் தோண்டிய மூன்று சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனமல்வில பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பலிபீடப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் 24, 26 மற்றும் 28 வயதுடையவர்கள் எனவும் தனமல்வில மற்றும் ஹம்பேகமுவ பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனமல்வில பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
