புதையல் தோண்டிய நான்கு சந்தேகநபர்கள் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியில் அமைந்துள்ள மின்சார வாரியத்திற்குச் சொந்தமான சுற்றுலா இல்லத்தில் புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கமைவாக, கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படை பி.பி. அதுகோரல உள்ளிட்ட அதிகாரிகள் குழு, இன்று ஞாயிற்றுக்கிழமை 12.45 மணியகளவிலேயே இந்த கைது நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இச் சம்பவத்தில் மின்சார வாரியத்தின் பணிபுரியும் 04 ஊழியர்களை அனுமதியின்றி அரசாங்க நிலத்தை சுரண்டுதல் மற்றும் சுரங்கம் தோண்டுதல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த சந்தேக நபர்கள் மற்றும் தடையப் பொருட்களை மேலதிக விசாரணைகளுக்காக கலைனாச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நாளை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகபோலீசார் தெரிவித்துள்ளனர்