புதுவிதமான கொள்ளையில் ஈடுபட்டு வரும் மூன்று பெண்கள்
-மஸ்கெலியா நிருபர்-
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பண்டிகை காலங்களில் புதுவிதமான கொள்ளையில் ஈடுபட்டு வரும் 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட மூன்று பெண்கள்.
நேற்று சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி செல்லும் அரச பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவரின் 3 பவுண் எடை உள்ள தங்க சங்கிலி ஒன்று களவாட பட்டு உள்ளது என திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை ஸ்டோனிகிலிப் தோட்ட சிறுவர் காப்பக உத்தியோகத்தர் திருமதி ஸ்ரீ ஸ்ரீ காந்தன் பதிவு செய்து உள்ளார் என பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கூறுகையில் பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்த போது தனக்கு அருகில் இருந்த கர்ப்பிணி ஒருவர் மற்றும் குழந்தை ஒன்றை வைத்து கொண்டு இருந்த பெண் ஒருவர் மேலும் ஒரு பெண் அடங்கலாக மூன்று பெண்கள் இணைந்து பேருந்து சற்று பிரேக் செய்த வேளையில் அந்த பெண்ணின் சங்கிலி களவாட பட்டு உள்ளது எனவும் களவாடிய பின்னர் அந்த திருட்டு கும்பல் டெவோன் பகுதியில் வைத்து பேருந்தில் ஏறி கையாடல் செய்த பிறகு கொட்டகலை அரச வைத்திய சாலை பகுதியில் இறங்கி சென்று உள்ளனர் எனவும் சற்று தூரம் சென்ற பின்னர் தனது கழுத்தில் இருந்த சங்கிலி இல்லாமல் உள்ளது தெரிய வந்தது உடன் பேருந்தில் இருந்து இறங்கி முச்சக்கர வண்டி எடுத்து அப் பகுதியில் தேடியும் அவர்கள் அகப்படவில்லை என தெரியவந்துள்ளது.
அவர்கள் பற்றி விரிவாக தேடுதல் நடவடிக்கையில் பத்தனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தற்போது பண்டிகை காலம் என்பதால் மலையக பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.