பிறப்புறுப்பில் காயங்கள்: சொந்த மகளை காதலனுக்கு இரையாக்கிய கொடூர தாய்

இந்தியாவின் கேரளா மானிலத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் காதலனுக்கு இரையாக்கிய தாய்க்கு கடந்த திங்கட்கிழமை நீதி மன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மனநலம் பாதிக்கப்பட்ட கணவரை விட்டு வெளியேறிய குற்றம் சாட்டப்பட்ட பெண், சிசுபாலன் என்ற தனது காதலருடன் வசித்து வந்துள்ளார். அப்போது 2018 முதல் 2019 வரை பல முறை, அந்த காதலனது காம இச்சைக்கு தனது 7 வயது மகளை அவர் இரையாக்கியுள்ளார்.

மேலும் அந்த குழந்தையின் பிறப்புறுப்பில் காயங்களும் இருந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் பதினொரு வயது சகோதரி வீட்டிற்கு வந்தபோது, ​தனக்கு நடந்தது குறித்து அவரிடம், பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார். ஆனால் அந்த மூத்த குழந்தையையும் சிசுபாலன் பலாத்காரம் செய்துள்ளதுடன் அவர்களை மிரட்டியதால், அந்த இரு குழந்தைகளும் யாரிடமும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

பின்னர் மூத்த சிறுமி தனது தங்கையுடன் சேர்ந்து தப்பித்து அவர்களின் பாட்டி வீட்டிற்கு சென்று பாட்டியிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்ததையடுத்து பாட்டி குழந்தைகளை குழந்தைகள் இல்லத்திற்கு மாற்றியுள்ளார்.

அங்கு நடந்த ஒரு கலந்தாய்வில் தங்களுக்கு நடந்த கொடூரங்களை அந்த சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அந்த கொடூர தாய்க்கு 20,000 ரூபாய் அபராதம் விதித்து, 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. சிறுமிகளை பலாத்காரம் செய்த அந்த நபர் விசாரணையின்போது தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்