பிறந்து இரண்டு நாட்களான சிசுவை கொன்று வீசிய பெற்றோர்

பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவின் சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதுடன் சிசுவை கொன்று வீசிய கணவன் மனைவியை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குழந்தையின் தந்தையென கூறப்படும் நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லேரியா பண்டார மாவத்தை களனிமுல்ல தெருவில் உள்ள அவரது வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சிசுவை பெற்றெடுத்துள்ளதுடன், சிசுவை கொன்று வீதிக்கு கொண்டு வந்து வீசியுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இரத்தக் கறைகளைத் தொடர்ந்து சென்ற பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று குறித்த ஜோடியை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களான கணவனும் மனைவியும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்