
பாரிய ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய நபர்
பாரிய ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய நபர்
பாணந்துறையில் நபர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை காலை ரயில் தண்டவாளம் சேதமடைந்து காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதனை அவதானித்த நபர் ஒருவர் குறித்த மார்க்கத்தினூடாக பயணித்த சாகரிகா ரயிலை தான் அணிந்திருந்த மேலாடையை பயன்படுத்தி சமிஞ்சை வழங்கி நிறுத்தியுள்ளார்.
குறித்த நபரின் செயலால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் பாரிய ரயில் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நபருக்கு பல்வேறு தரப்பினர்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News 24