பாகிஸ்தானின் கராச்சி வெள்ளத்தில் மூழ்கி 10 பேர் பலி
பாகிஸ்தானின் தலைநகரம் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான கராச்சி, இந்த நாட்களில் நாட்டைத் தாக்கும் பலத்த பருவமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, பாகிஸ்தான் அரசாங்கம் அங்குள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மழை காரணமாக குறைந்தது 10 பேர் இறந்துள்ளனர், அத்துடன் இப்பகுதியில் அதிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு பருவமழை பாகிஸ்தான் முழுவதும் கடுமையான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வடமேற்கு மலைகளைத் தாக்கிய திடீர் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது, மேலும் குறிப்பிடப்படாத எண்ணிக்கையைக் காணவில்லை என்று அந் நாட்டின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.