பழப்புளிக்கு தட்டுப்பாடு

நாட்டில் பழப்புளிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அதன் விலை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பழப்புளி வழக்கமாக அதிகபட்ச சில்லறை விலையாக ஒரு கிலோ ரூபா 350 முதல் 400 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் காணப்படும் நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் பகுதியில் 2,000 ரூபாவுக்கு சில்லறை விலையில் விற்கப்பட்டுள்ளது.

இதேவேளை புளிய மரங்களில் அறுவடை இல்லை என்றும், மார்ச் மாத இறுதி வரை இந்தப் பற்றாக்குறை தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்