நெல் விலை வீழ்ச்சி – விவசாயிகள் பாதிப்பு

நாட்டில் நெல்லின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரிசி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார்.

நெல்லுக்கான விலை 14 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

கடந்த காலங்களில் 2 இலட்சம் கிலோ மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவை தற்போது சதொச நிறுவனங்களில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார் .

இதனால், உள்ளூர் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் 200 ரூபாய்க்கும் மேல் அரிசியை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, ஐக்கிய அரிசி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்