நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகம் அளிக்காத 42 சந்தேக நபர்கள் கைது!

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகம் அளிக்காத 42 சந்தேக நபர்கள் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸார் மற்றும் தர்மபுரம் பொலிஸார் இணைந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 42 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் இன்று திங்கட்கிழமை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.