நாடாளுமன்றத்தில் பெண்களிடம் சேட்டை: மூவர் கைது

நாடாளுமன்றத்தில் பெண் ஊழியர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் கடமை புரியும் கனிஷ்ட ஊழியர்கள் மூவரே இவ்வாறு பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.