நல்லூர் தேர்த்திருவிழா – யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை

யாழ். நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா இன்றைய  தினம் இடம்பெறுகிறது.

இதனையொட்டி பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும்  நிகழ்வில் பங்கேற்க  வேண்டும் எனும் நோக்கில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் பிரதமரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து   இன்றைய  தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர்,  பணிப்புரை விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.