தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மருத்துவ சங்கம்

வரவு செலவுத் திட்டத்தில் மருத்துவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கத் தவறியதால், எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

மத்திய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மருத்துவமனைகளுக்கு வெளியே எடுத்துச் செல்ல வேண்டிய மருந்துகளுக்கான மருந்துச் சீட்டுகளை வழங்குவதில்லை என்றும் இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்த்தபடி மருத்துவர்களின்; பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகள் வழங்கத் தவறியதால், இது தொடர்பாக எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்து சிறப்பு மருத்துவர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிறப்பு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.