தொடர் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் : கிரிக்கெட் சபை எடுத்த அதிரடி தீர்மானம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சந்தித்த தொடர் தோல்விகளை அடுத்து, அந்த நாட்டு கிரிக்கெட் சபை கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளது.
இதற்கமைய, 2025-2026 ஆம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்தத்தில் எந்தவொரு கிரிக்கெட் வீரரையும் A பிரிவில் இணைக்காது இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் A பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு, குறித்த இருவரும் B பிரிவிற்கு தரமிறக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு B பிரிவு ஒப்பந்தத்தில் இருந்த பாகிஸ்தான் டெஸ்ட் தலைவர் ஷான் மசூத், D பிரிவுக்கு தரமிறக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், சட்டப் பிரச்சினை காரணமாக சுமார் 8 ஆண்டுகள் தனது மத்திய ஒப்பந்தத்தை இழந்த ஃபகர் ஷமானுக்கு இந்த ஆண்டு B பிரிவில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.