தேனீர் மற்றும் உணவுப்பொதியின் விலை குறைப்பு
சோறு பொதி ஒன்றின் விலை 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
மேலும், தேனீரின் விலையும் 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
எரிவாயு கொள்கலன்களுக்கான விலை குறைக்கப்பட்டதையடுத்து இந்த விலை குறைப்பை தாம் மேற்கொள்வதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.