தேசபந்துவை பதவி நீக்குவதற்கான யோசனை? : இன்று பாராளுமன்றில் விவாதம்
தேசபந்து தென்னகோனை, பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனையை நிறைவேற்றுவது தொடர்பில் பாராளுமன்றில் இன்று விவாதிக்கப்படுகிறது.
2002 ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் சட்டத்துக்கு அமைய இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.
இதற்கமைய, இந்த யோசனை மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் 4 மணியளவில் நடத்தப்படுமெனபாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசாரணைகளுக்காகச் சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு அமைய, தேசபந்து தென்னகோன் தவறிழைத்துள்ளமை உறுதியாகியுள்ளது.
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியிலிருந்து நீக்குவது பொருத்தமானது என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.
பொலிஸ் மாஅதிபராக பணியாற்றிய போது அவர், தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், கடமைகளுக்குப் புறம்பாகச் செயற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது .