தேங்காய் எண்ணெய் நிறுவனத்தின் பாதுகாவலர் கொலை: ஒருவர் கைது

புத்தளம் பிரதேசத்திலுள்ள தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனமொன்றின் பாதுகாவலரைக் கொன்று 14 இலட்சம் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

பட்டுலுஓயா பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனமொன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இறந்தவர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரி என்பதும், கடந்த 10ஆம் திகதி இரவு பணியில் இருந்தவர் என்பதும், மறுநாள் காலை அந்த நிறுவன ஊழியர்கள் வந்து பார்த்தபோது தலையில் காயங்களுடன் இறந்து கிடந்ததுடன் சுமார் 14 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இதன்போது விஜயகடுபோத (வயது – 45) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்த பெட்டகத்தை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு இலட்சத்து நாற்பத்தாயிரம் ரூபா பணத்தையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்