
துசித ஹல்லொலுவ விளக்கமறியலில்
துசித ஹல்லொலுவ விளக்கமறியலில்
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ ஜூன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான அரசாங்க சொத்துக்களை குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக அவர் தற்போது விளக்கமறியலில் உள்ளார்.