திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் சுற்றுலா விடுதியின் உணவகம் தீக்கிரை!

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணியளவில் மின்சார கோளாறு காரணமாக  விடுதியின் உணவகம்  தீப்பற்றி உள்ளதாக தெரியவந்துள்ளது

இதனை அடுத்து தீயணைப்பு படையினர் வருகை தந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ பற்றியமை காரணமாக ஓலையினால் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு அறை முற்றாக சேதம் அடைந்துள்ளதாகவும், எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.