தம்பலகாமத்தில் முதியோர்களை வலுவூட்டல் மற்றும் முதியோர் சங்க புதிய நிருவாக தெரிவும்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீரா நகர் கிராம சேவகர் பிரிவில் முதியோர்களை வலுவூட்டல் மற்றும் முதியோர் சங்க நிருவாக தெரிவும் இன்று செவ்வாய்க்கிழமை மீரா நகர் கிராம சேவகர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நிகழ்வில் தேசிய முதியோர்களுக்கான செயலகம் ஊடாக முதியோர்களுக்காக வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் திருகோணமலை மாவட்ட முதியோர் உரிமைகளுக்கான மாவட்ட உத்தியோகத்தர் இர்பான் தெளிவூட்டினார்.

முதியோர்களை வலுப்படுத்தி புதிய நிருவாக சங்கமும் இதன் போது குறித்த கிராம சேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்டன. குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர் ஹபீபுள்ளா, தம்பலகாமம் பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர்,துறைசார் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,கிராம சேவகர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.